“இரவிகுளம் தேசிய பூங்கா” சுற்றுலா

வாழ்க்கையில் சுமைகள், சோகங்கள், வலிகள், துரோகங்கள் என பலவற்றை சந்திக்கின்றோம். இவை அனைத்தும்ஒன்று சேர்ந்து மனிதர்களுக்கு பலவிதமான மன அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.

இந்த மனஅழுத்தம்  வாழ்வில் பலஇன்னல்களுக்கு மனிதர்களை  ஆளாக்குகிறது. இவற்றில் இருந்து தப்பிக்கவோ அல்லது சிறிது விலகி இருக்கவோபெரும்பாலோனோர் நினைக்கின்றனர்.

இது போன்ற  சூழலில் தான் ஒவ்வொரு மனிதர்களும் தன்னை மறந்து சிலநாட்கள் வாழ விரும்புகின்றனர். தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மனிதர்களுக்கு  பெரிய நோய்யாக மனஅழுத்தம்இருக்கின்றது.

இந்த மன அழுத்தத்தை அறவே நீக்கும் ஒரே மருந்து சுற்றுலா.

சுற்றுலா பயணம் மேற்கொள்ளுவதால் மனிதனின் மன அழுத்தங்கள் குறையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரவர் மன நிலைக்கு ஏற்றவாறு அவர்களது சுற்றுலா பயணங்கள் இருக்கும்.

சிலர் இயற்கையை விரும்புவார்கள், சிலர் எதையாவது பழமையான தகவல்கள் அறிவதில் ஆர்வம் காட்டுவார்கள், சிலர் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைவிரும்புவார்கள் இப்படி பல்வேறு வழிகளில் அவர்களது மன அழுத்தத்தையும், மன கவலைகளையும் போக்க அநேகமக்கள் தேர்வு செய்வது  சுற்றுலா செல்வது தான்.

நானும் அப்படி தான் மனதில் உள்ள சுமைகளை குறைக்க சுற்றுலாஎன்னும் அருமருந்தை தேர்ந்தெடுத்தேன்.

எந்த இடத்தில் சுற்றுலா செல்வது, எங்கு தங்குவது, எப்படி சுற்றிப்பார்பது, எவ்வளவு செலவாகும் என பல குழப்பங்கள்மனதில் தோன்றியாது.

நீண்ட நாட்களாக கேரளா மக்களின் கலாச்சாரம், உணவு, சிறப்புகள் என அங்குள்ளஇடங்களை பற்றி அறிந்து கொள்ள முற்பட்டேன்.

இதன் பொருட்டு நான் சுற்றுலா செல்ல தேர்வு செய்த இடம்”கேரளா”. கேரளா என்றதும் கேரளத்து பெண்கள் , கடல்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், தேயிலை தோட்டங்கள், நறுமண பொருட்கள் என பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.

கேரள அன்னைக்கு அவ்வளவு அழகும், மணமும்உண்டு. கேரளாவில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா இடத்திற்கும் ஒவ்வொரு சிறப்புண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

மூணாறு:-

இரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலா
இரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலா

கேரளாவில் குறைந்த செலவில் நிறைந்த சுற்றுலாவை மேற்கொள்ள நான் தேர்வு செய்த இடம் “மூணாறு “. மூணாறு தென்னிந்தியாவின் “காஷ்மீர்” என்ற பெருமைக்குரியது மற்றும் தேயிலைத்தோட்டங்களுக்கு பெயர்பெற்றது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் மூணாறு ஒரு சிறு நகரம் தான் .சிறு நகரமாக இருந்தாலும், அதிகமான சுற்றுலாப்பயணிகள்  செல்லும் சுற்றுலாத்தலமாக   மூணாறு  இருக்கிறது.

மூணாறு  கேரளாவில் இருந்தாலும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாக பார்க்கப்படுகிறது. எனக்கும்  தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொண்டதை போன்ற உணர்வு தோன்றியது.

மூணாறில் பல இடங்கள் பிரபலமாக இருந்தாலும், நான் சுற்றிப்பார்க்க விரும்பிய இடம் “இரவிகுளம் தேசிய பூங்கா”.

இரவிகுளம் என்றாலே நமக்கு நினைவில் வருவது தேசிய பூங்கா, பனிரெண்டு   வருடத்திற்க்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர், வரையாடு போன்றவை.

வழித்தடம் :-

நாம் முதலில் கேரளாவை அடைந்த பிறகு, மூணாறு வந்தடையவேண்டும். மூணாறு – உடுமலை அல்லது   உடுமலை – மூணாறு செல்லும் வழியில் தான்   இந்த இரவிகுளம் தேசிய பூங்கா அமைந்துள்ளது.

இங்கு செல்வதற்க்கு மூணாறிலிருந்து ராஜமலை என்னும் இடத்திற்க்கு வரவேண்டும்.மூணாறு-ராஜமலை சென்றைடைய 15 கிலோமீட்டர் தூரம் வரும்.

இந்த ராஜமலையில்   உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு செல்ல  கிட்டத்தட்ட 30 முதல் 45 நிமிடங்களில் எடுத்துக்கொள்ளும்.செயல்படும் நேரம் :-

  இரவிகுளம் தேசிய பூங்காவை பொறுத்தவரையில் காலையில் 7.30 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும். குறிப்பாக பிப்ரவரி மற்றும் மார்ச்  மாதங்களில் இந்த பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது.

நுழைவுக்கட்டணம் :-

இரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலா
இரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலா

இரவிகுளம் தேசிய பூங்காவை பார்வையிட ராஜமலை அடிவாரத்தில் அலுவலகம் ஒன்று இயங்குகிறது. இந்தஅலுவலகம் இரண்டு அடுக்குகளை கொண்டது.

அடிவாரத்தில் நுழைவு சீட்டு பெற்றுக்கொள்ளும் இடம். முதல் தலத்தில்சுற்றுலாப்பயணிகள் தங்களுடைய களைப்பை போக்கும் வகையில் ரெஸ்டாரண்ட் உள்ளது.

இங்கு நமக்கு பிடித்ததேனீரை பருகிவிட்டு, பிடித்த நொறுக்கு தீனிகளை சாப்பிடலாம். அதற்கடுத்த தலத்தில் அனைத்து சுற்றுலாபயணிகளும் வரிசையில் நின்று பேருந்தில் ஏறிச்செல்லும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த அலுவலகத்தைபொறுத்தவரையில் டிக்கெட்டை எடுக்க இரண்டு கவுண்டர்கள் உள்ளது.ஒன்று ஆன்லைன் மூலமாக பதிவுசெய்வது,மற்றொன்று நேரடியாக பதிவு செய்வது.

ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய ஒரு நாட்களுக்கு முன்பே டிக்கெட் பதிவு செய்வது நல்லது.அதே போல நேரடியாகஆப் லைன் மூலமாக பதிவு செய்ய மணிக்கணக்காக காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்படும்.

நான் ஆன்லைன் மூலமாகடிக்கெட்டை பதிவு செய்திருந்தேன்.நுழைவுக்கட்டணமாக நான் செல்லும்பொழுது ஒரு நபருக்கு 170 ரூபாய்கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கேமராவிற்கு தனி கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

ராஜமலை வனவிலங்கு சரணாலயம் (Rajamalai Wildlife Sanctuary):

ராஜமலையின் நுழைவாயில், நம்முடைய சொந்த  வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. கேரளா அரசின் மூலமாக பேருந்துகளும், பேட்டரி கார்களும் இயக்கப்படுகின்றன.

பேருந்தில் பயணம் மேற்கொள்வதா இல்லை பேட்டரி காரில் பயணத்தை மேற்கொள்வதா என்பது சுற்றுலா பயணிகளின் விருப்பத்தை பொறுத்து  முடிவெடுத்துக்கொள்ளலாம்.

பேருந்தில் செல்ல குறைந்த கட்டணமும், பேட்டரி காரில் செல்ல அதிகமான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. நான் குறைந்த செலவில் செல்ல முடிவெடுத்து பேருந்தில் ஏறினேன்.

பேருந்து மெல்ல நகர ஆரம்பித்தது, வழி முழுக்க தேயிலை தோட்டங்களாவே இருந்தது. இத்தோட்டடங்களை பனிமூட்டங்கள் சூழ்ந்துகொண்ட காட்சியோ  கண்கொள்ளா கட்சியாக இருந்தது.

இந்த தருணம் மனதிற்கும் சரி, கண்ணுக்கும் சரி குளிர்ச்சியாக இருந்தது.

கனமாக இருந்த மனதை மிகவும் லேசாக மாற்றியது இந்த தருணம். நான் சென்ற பொழுது பனிமூட்டங்கள் சற்று அதிகமாகவே தேயிலை தோட்டங்கள் மீது உருண்டோடியதை நேரில் பார்த்தது புதுமையாக இருந்தது.

கொஞ்சம்  தூரத்தை கடந்திருப்போம் லேசாக அருவிக்கொட்டும் சத்தம் காதில் கேட்டது. மலையின் உச்சியிலிருந்து தண்ணீர் அருவியின் வழியாக பாய்ந்தோடியது.

செல்லும் வழியெங்கும் இதுபோன்று சிறு சிறு  நீரோடைகள், நீர்விழ்ச்சிகள் மற்றும் அருவிகள்  என பல காட்சிகள் கண்களுக்கு விருந்தளித்தது.

ராஜமலை வனவிலங்கு சரணாலயம் Vs இரவிகுளம் தேசிய பூங்கா :-

கேரளா அரசானது  மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக  இருக்க சில இடங்களை சாகுபடிக்காக ஒதுக்கியது.

ஆனால் மக்கள் இந்த நிலத்தை விவசாயத்துக்கு  பயன்படுத்தாமல் இருந்ததால் 1971 ஆம் ஆண்டு அரசே அந்த நிலத்தை திரும்ப பெற்றது அதேசமயம் 1975 ஆம் ஆண்டு இந்த நிலத்தை “ராஜமலை வனவிலங்கு சரணாலயம்”மாக அறிவித்தது .

 கேரளா அரசு வனவிலங்கு சரணாலயமாக  அறிவித்தற்கு முக்கிய காரணம் அங்கு நிறைய பறவைகள், வன விலங்குகள், அரிய வகை தாவரங்கள் மற்றும்  என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது.

அவ்வுயிரினங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது நீலகிரி தஹார் என்றழைக்கப்படும் வரையாடு.

வரையாடு அழிந்து வரும் சூழ்நிலையில் உள்ளதால், அவ்விலங்கின் வாழ்விடத்தை பாதுகாக்கும் நோக்கில் தான் ராஜமலை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது . இதனை தொடர்ந்து தான் 1978 ஆம் ஆண்டில் “இரவிகுளம் தேசிய பூங்கா”வாக மாற்றப்பட்டுள்ளது.

இரவிகுளம் தேசிய பூங்கா :

இரவிகுளம் தேசிய பூங்காவனது இந்தியாவில் உள்ள கேரளாவின் இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. இரவிகுளம் தேசிய பூங்கா 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  பூங்கா.

கேரளாவின் உயரமான மலைத்தொடரில்  தேயிலை தோட்டாக்களுடன் கூடிய மலைகள் வளைந்து நெளிந்துசெல்லக்கூடிய பாதைகள் என மிகவும் அற்புதமான காட்சியை இரவிகுளம் தேசிய பூங்காவானது நமக்குவழங்குகின்றது .

இரவிகுளம் தேசிய பூங்கா என்றாலே அனைவருக்கும் தெரிந்தது நீலகிரி தார் என்றழைக்கக்கூடிய வரையாடும், அரியவகை பூக்களான குறிஞ்சி பூக்களும் தான்.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி மற்றும் தேசிய பறவை மயில்என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் நம்மில் பலருக்கும் தெரியாத  உண்மை தமிழகத்தின் மாநில விலங்கு”வரையாடு .

இந்த வரையாடை காணவே அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணமாகவே உள்ளனர்.

நானும் அப்படித்தான் இந்த வரையாடை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்ற ஆர்வத்தோடும்பயணித்தேன்.ராஜமலையின் உச்சியில் பேருந்து நின்றது.

அங்கிருந்து இரவிகுளம் நேஷனல் பார்க்கை அடைய ஒருகிலோமீட்டர் தூரம் வரை நடக்க வேண்டும். பேருந்து கடைசியாக நிறுத்தப்பட்ட இடத்தில் ஒரு  “ஸ்டோரி ஆப் திபார்க் (Story of the park ) ” என்ற சிறு மியூசியம் உள்ளது.

இங்கு சில விலங்குகளின் எலும்புக்கூடுகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்பு இந்த பூங்காவில் உள்ளதாவரங்கள் ,பறவைகள் மற்றும் விலங்குகள் பற்றிய முக்கியமான பதிவுகள் புகைப்படத்துடன் இருந்தது.

இந்தஇடத்தில் இரவிகுளம் தேசிய பூங்காவை பற்றிய முழுவிவரங்களையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.இதை பார்த்துபடித்து முடித்த பிறகு , நாம் ட்ரெக்கிங்க் போக ஆரம்பித்தால் பல புது புது தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளமுடியும்.

இரவிகுளம் தேசிய பூங்காவை நாம் சுற்றி பார்க்கும் போது  இயற்கை  அழகை சொல்ல வார்தைகள் தான் இல்லாமல்போகும்.

அங்குள்ள பூங்காவை சுற்றி மூன்று வகையான முக்கிய தாவரங்களால் சுழலப்பட்டுள்ளது. அவை புல்வெளிகள், புதர் நிலங்கள் மற்றும் ஷோலே காடுகள் ஆகியவை தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் காட்சியளிக்கும்.

இம்முன்று வகையான தாவரங்களை பற்றி சிலவற்றை நாம் தெரிந்து கொள்வோம்.

புல்வெளிகள், புதர் நிலங்கள்

1. நாம் பூங்காவை சுற்றி பார்க்கும் போது அதிகமாக கண்களில் படுவது இந்த புல்வெளிகள் தான் . புல்வெளிகள்பூங்காவை சுற்றியுள்ள உயரமான மலைகளில் முதலிடம் வகுக்கிறது .

2.நாம் இந்த பூங்காவில் நடந்து செல்லும்போது ஆங்காங்கே புதர்கள் தென்படும். புதர் நிலமானது பாறைகளின்அடிவாரத்தில் அதிகமாக தெரிவதை நம்மால் காணமுடியும் .

3.மலைகள்  மற்றும் பீடபூமிகளுக்கு இடையில்  சில காட்சிகள் தெரியும் அந்த இடம் தான் ஷோலே காடுகள். இந்தஇடைப்பட்ட பகுதிதான் பள்ளத்தாக்கு போல காட்சியளிக்கும்.

இந்த இரவிகுளம் தேசிய பூங்காவில் கிட்டத்தட்ட 19 வகையான நீர்விழ்ச்சிகள் மிகவும் கண்கவரும் வண்ணம் அமைந்துள்ளது .

 வியக்கும் வகையில் சில  பறவைகள் ,வரையாடு, பட்டாம்பூச்சிகள் போன்றவை  நம்மால் ரசிக்க முடியும் .

இரவிகுளம் நேஷனல் பார்க்கை பொறுத்தவரையில் கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சிக்கு செல்ல செல்ல பனிமூட்டங்கள் நம்மை தொட்டுச்செல்வதை உணரமுடியும்.

அந்த நொடி அவ்வளவு இதமாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடியதாகவும் இருந்தது. இங்கு ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல ஆரம்பித்தோம்.

நாம் ட்ரெக்கிங்  செல்லக்கூடிய பாதைகளில் அங்கங்கே செடி, கொடி, மரங்கள் மற்றும் பூச்செடிகள் இருந்தது.

அந்த தாவரங்களின் பெயர்கள், அவற்றின் பிறப்பிடம் போன்ற பலதகவல்களை கொண்ட பெயர் பலகை அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டு  இருந்தது.இது சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் விதமாக இருந்தது.

சில இடங்களில்   நின்று அங்குள்ள இயற்கை அழகை ரசிக்கும் வண்ணம் மரத்தால் செய்யப்பட்ட குடைபோன்ற நிழற்குடம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுற்றுலாப்பயணிகள் அங்கு  அமர்ந்து தங்களுடைய  கலப்பை போக்கிக்கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த நிழல் குடை பார்ப்பதற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்ததால், அங்கு  அமர்ந்து செல்பி எடுத்துக்கொண்டேன்.

அதே போல சில இடங்களில் மொபைல் டாய்லெட்டும் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல செல்லும் வழியில் சில இடங்களில் பாறையின் மீது தண்ணீர் சிறிது சிறிதாக பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது கண்ணுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

நாங்கள் இந்த பாதையை கடக்கும்பொழுது பல சரக்கு வாகனங்கள் வந்தவண்ணம் இருந்தது. இந்த இடத்தை பொறுத்தவரையில் குடும்பத்தோடு வந்து செல்ல ஏதுவான இடம். இங்கு சென்ற பொழுது பல பேர் தங்களுடைய குழந்தைகளுடன் ஜுலியாக வந்ததை பார்த்தேன்.

நான் இந்த இடத்திற்கு அக்டோபர் மாதத்தில் வந்ததால் என்னவோ பனிமூட்டங்கள் அதிகமாக தென்பட்டது. எதிரில் உள்ள நபர்களே யாரென தெரியாத அளவிற்க்கு பனிப்பொழிவு இருந்தது.

அமைதியான இந்த நேரத்தில் சாலைகளுடன் பேசிக்கொண்டே நடைபயணம் செல்வது எப்படி இருக்கும். மாயாஜாலமான உலகத்திற்க்கு நம்மை அழைத்து சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலா

வரையாடு – நீலகிரி  தஹ்ர் (Niligiri Tahr ):

                அடுத்து இரவிகுளம் தேசிய பூங்காவை சுற்றி பார்க்கும் போது கண்ணில் ஒரு ஆடு தென்பட்டது. இந்த ஆடுகளின் கொம்புகள்   வளைந்து காணப்பட்டது. தமிழில் வரையாட்டை   நீலகிரி தாரை  என்றும் அழைக்கப்படுகிறது .வரையாடு எனப்படும் நீலகிரி தஹ்ர் தமிழ்நாட்டின் மாநில விலங்காகவும் உள்ளது .

இங்கு வந்துசெல்லும் அனைவருக்கும் இதை பார்க்கக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதிஷ்டம் இருக்கும் சிலரது கண்களுக்கு மட்டுமே இது தென்படும். பனிமூட்டங்கள் அதிகமாக இருந்ததால் என்னால் தெளிவாக வரையாடை பார்க்கமுடியவில்லை. ஆனாலும் ஓரளவிற்கு பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் காணப்படும் வரையாடு 4000 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைமுடிகளில் வாழும் ஒரு விலங்கினம் .வரையாடு =வரை+ஆடு ,வர என்பது மலை, மலையுச்சி  என்று பொருள் .ஆடு என்பது விலங்கினங்களில் ஒன்றான ஆட்டினத்தை சேர்ந்தது.

சர்வதேச இயற்கை பாதுகாப்பு சட்டத்தில் (IUCN -International union for Conversation of Nature ) இந்த நீலகிரி தாஹரை 2010 ஆம் ஆண்டு சிவப்பு பட்டியலில் சேர்த்து ”அழிந்து வரும் ”இனமாக அறிவித்துள்ளது. இரவிகுளத்தில் வரையாடு எனப்படும்  அழிந்து வரும் சூழலில் உள்ளது என்பது வருந்துவதற்குரிய ஒன்று.  கேரளாவில் உள்ள ”இரவிகுளம் தேசிய பூங்காவில்” மட்டும் கிட்டத்தட்ட 1000 எண்ணிக்கையில் வரையாடுகள்  உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

குறிஞ்சி மலர் :

நாம் பள்ளிகளில் படிக்கும் போது  சங்க காலத்தமிழர்கள் வாழ்ந்த நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகையாக பிரித்தனர்.

இந்த வரிசையில் நம் கண்ணுக்கு விருந்தாளிக்கு குறிஞ்சி செடியானது நம் முன்னோர்கள் கூறியது போல” மலையும் மலையை சார்ந்த இடமும் குறிஞ்சி ” என்பது நாம் அறிந்த ஒன்றே. அதை  தெளிவாக நமக்கு உணர்த்தும் விதமாக மலைகளில் இந்த குறிஞ்சி பூ  காட்சியளிக்கிறது .

குறிஞ்சி மலரானது 12 வருடத்திற்க்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை தாவரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.  2018 ஆம் ஆண்டு  கேரளத்திலும், தமிழகத்திலும் மறுபடியும் பூத்தது .

இதற்கடுத்தபடியாக மீண்டும் 2030 ஆம் ஆண்டில்  பூக்கும். இந்த மலரை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் 2030 ஆம் ஆண்டு சுற்றுலா மேற்கொள்வது சிறப்பு.நானும் இந்த குறிஞ்சி பூவை  பார்க்கமுடியாமல் போனது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

நீலக்குறிஞ்சி :

இந்த நிலைகுறிஞ்சி செடியானது கடல்மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீட்டர் உயரத்தில் வளரும் .குறிஞ்சிக்கு பெயர் போன இடம்தான் நம்முடைய இரவிகுளம் .

இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் இந்த குறிஞ்சி செடி நீல நிறமலர்களை கொண்டுள்ளது.

இந்த இடம் நீலநிற கம்பளத்தினால் போர்த்தப்பட்டுள்ளது  போல மிகவும் அழகாக கண்களுக்கு காட்சியளிக்கும்.

ஏறவிக்குளம்  மலை பிரதேசத்தில் பூக்கும் இந்த நீலக்குறிஞ்சி மலராலே இம்மலை தொடர்ச்சிக்கு  ”நீலகிரி  ” என்ற பெயர் வர முக்கிய காரணமாக உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது .

இரவிகுளம் தேசிய பூங்காவில் குறிஞ்சி மலரானது கூடுதலாக பூக்கும் .

தென்னிந்திய மலைப்பகுதியில் உள்ள எழில் கொஞ்சும்   ஊதாக் குறிஞ்சி செடி வளர்ச்சியானது கடந்த 100 ஆண்டுகளாகவே  குறைந்து வருகிறது. என்பது மிகவும் வருந்தும் விஷியமாக இருந்தது.

நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் இந்த அரிய வகை குறிஞ்சி மலரை காண்பது என்பது மறைந்து விடும் போலிருக்கிறது . இரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலா

இரவிகுளம் தேசிய பூங்காவனது இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் , பள்ளத்தாக்குகள், நீர்விழ்ச்சிகள், நீலக்குறிஞ்சிமலர்கள், வரையாடுகள், சிவப்பு – ஆரஞ்சு நிற தவளை என பல அம்சங்கள் நிறைந்தது.

நம்முடைய கவலைகளைமறந்து சில நாட்கள் வாழ ஏற்ற இடம் “இரவிகுளம் தேசிய பூங்கா”.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top