மைசூர் சுற்றுலா தலங்கள்

“சொந்த வீடு” – ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை என்றால் அதில் கண்டிப்பாக இருப்பது தன் விருப்பத்திற்கு ஏற்ற ஒரு சொந்தவீடு. அப்படி ஒரு வீடு கட்டி அதில் வாழ்ந்தாலே சந்தோசத்திற்கு அளவே இல்லை எனலாம்.
சாதாரண மக்களுக்கே இப்படிஒரு ஆசை இருக்கும்போது நாட்டின் ராஜாக்கள் அவர்களின் அரண்மனைகள் யோசித்து பாருங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து கட்டியிருப்பார்கள். அதற்கு உதாரணமாக காதலிக்காக கட்டிய தாஜ்மஹால், மைசூர் பேலஸ் என பலஎடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வரலாற்று சிறப்புமிக்க மைசூர் பேலஸ், லலிதா மஹால், ரயில் அருங்காட்சியகம், சாமுண்டேஸ்வரி கோவில், விலங்கியல் பூங்கா, கிருஸ்துவ தேவாலயம் என பல இடங்கள் மைசூரில் உள்ளது.
இன்று நம்முடைய சுற்றுலா தகவல் மைசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களை மிக குறைந்த செலவில் சுற்றிபார்க்கப்போகிறோம். எப்படி குறைந்த செலவில் சுற்றிப்பார்பது என்பதுதானே உங்களுடைய கேள்வி.
புரிகிறது, இதோஅதற்கான பதில். மாவட்ட வாரியாகவும், மாநில வாரியாகவும் தங்களின் ஊரின் சிறப்பை பறைசாற்றும் விதமாகவும், சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் விதமாகவும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் மூலம் ஒரு குறிப்பிட்டஇடங்களை சுற்றிக்காண்பிக்கின்றனர்.
அப்படி பேருந்தின் மூலமாக பதிவு செய்து நாம் மைசூர் சுற்றி பார்க்கப் போகிறோம்வாங்க போகலாம் மைசூர்.
வழித்தடம்:
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் சங்க காலத்தில் மையூர் என்றும், எருமையூர் என்றும்அழைக்கப்பட்டுள்ளது.மைசூர் கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.மைசூர் செல்ல பேருந்து மற்றும்தொடர்வண்டி வசதியும் உள்ளது.
தங்கும் அறைகள் :
மைசூரில் தங்கும் அறைகள் 300 லிருந்து 1000 என அவரவர் வசதிக்கு ஏற்றபடி தங்கும் அறைகளைதேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
நமக்கு அடுத்தநாள் காலை 9.00 மணிக்கு சுற்றுலா செல்லும் பேருந்து என்பதால் பேருந்திலோ அல்லது தொடர்வண்டியிலோ ஒருநாள் முன்னதாகவே சென்று அன்று இரவு தங்கி அடுத்தநாள் நம்முடையசுற்றுலாவை தொடங்கலாம்.
உணவு:
மைசூர் உணவு நமக்கு உடலுக்கு ஒத்துக்கொள்ளுமே என சந்தேகத்துடன் சென்ற நமக்கு , சந்தேகமே வேண்டாம் தமிழ்நாடுஉணவு வகைகள் இங்கு உண்டு என்பதுபோல் இருந்தது நாம் சாப்பிட்ட இட்லி, தோசை, பொங்கல், சாம்பார் வாடை எனநல்ல ருசியாக இருந்தது. உணவை பற்றிய கவலை வேண்டாம்.
பேருந்து பதிவு செய்வது எப்படி:
மிக குறைந்த செலவில் பேருந்தில் சுற்றுலா என முடிவு செய்த நாம் அதற்கு முதலில் பதிவு செய்யவேண்டும். Mysure Bus Trip என Google -லில் தேட தொடங்கினாள் பல Website வரும் அதில் நாம் ஒன்றை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தைசெலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பேருந்தில் சுற்றுலா தொடங்கும் நேரம் காலை 9 மணி என தெரிவித்தனர். அத்துடன் ஒருசில இடங்களில் மட்டுமே பேருந்து நிற்கும் என பேருந்து நிறுத்தங்களை சொல்லி, அதில் ஏதாவது ஒருநிறுத்தத்தில் நீங்கள் பேருந்தை நிறுத்தி ஏறிக்கொள்ளலாம் என்றனர்.
ரயில் நிலையத்திற்கு அருகில் பதிவு செய்த பேருந்தில்காலை 9.00 மணிக்கு ஏறிவிட்டோம். பயணம் இனிதே ஆரம்பம்.
பல இடங்களுக்கு நம்மை அழைத்து செல்லும் அந்த பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டேன். அந்த பேருந்தில் இருந்த சுற்றுலாவழிகாட்டி நாம் செல்லும்இடங்களுக்கான நுழைவு கட்டணத்தையும் அத்துடன் 100 ரூபாய் சேவை கட்டணமும் தன்னிடம்கொடுக்கவேண்டும் என்பதை தெரிவித்தார்.
மைசூர் சுற்றுலாவில் நாம் சென்ற முதல் இடம் மைசூர் மியூசியம்.
மைசூர் அருங்காட்சியகம்:

நமது சுற்றுலா பேருந்து நிறுத்தப்பட்ட முதல் இடம் மைசூர் அருங்காட்சியகம், இங்கு நுழைவு கட்டணம்வசூலிக்கப்படுகிறது. நுழைவு கட்டணத்தை செலுத்தி உள்ளே நுழைந்தால் பசுமையான மைதானத்துடன் காட்சியளிக்கும்.
மைசூர் அரண்மனை கட்டி முடிப்பதற்கு முன் அரசகுடும்பத்தினர்கள் இங்குதான் இருந்தார்கள் என கூறப்படுகிறது. இந்தஅருங்காட்சியத்தில் மன்னர்களின் ஓவியங்கள்,அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், சிம்மாசனம், கட்டில்கள், பல்லக்குகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அரைமணி நேரம் அருங்காட்சியகத்தில் நம்முடைய நேரத்தைசெலவிடலாம்.
மைசூர் பட்டு:

நமது பேருந்து சுற்றுலாவில் அடுத்ததாக நாம் சென்ற இடம் மைசூருக்கே அடையாளம் என்று சொல்லப்படும் மைசூர் பட்டு. புவிசார் குறியீடு பெற்ற இந்த மைசூர் பட்டு மைசூரின் அடையாளம்.
ஆரம்பத்தில் அரச குடும்பங்களுக்காகக செய்யப்பட்டஇந்த மைசூர் பட்டு சுதந்திரத்திற்கு பின் மைசூர் மாநில பட்டு வளர்ப்புத்துறை பட்டு நெசவுத் தொழிற்ச்சாலையின்கட்டுப்பாட்டுக்கு சென்றது.
இங்கு பட்டுபுடவைகள் மட்டுமல்லாது சட்டைகள், குர்தாக்கள், பட்டுவேட்டிகள் மற்றும் கழுத்தணிஆகியவை மைசூரில் தயாரிக்கப்படுகிறது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த கடைகளில் மைசூர் பட்டு மட்டுமல்ல, சந்தனம், தேக்குமரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், வாசனை திரவியங்கள் ஆகியவை உள்ளது. நமக்கு தேவையானதைநாம் வாங்கிக்கொள்ளலாம்.
மைசூர் விலங்கியல் பூங்கா:
கிட்டத்தட்ட 10 ஏக்கர் பரப்பளவில் மைசூர் அரண்மனைக்கு அருகில் உள்ளது மைசூர் மிருகக்காட்சிசாலை என்றுஅழைக்கப்படும் ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்.
இதற்கான நுழைவு கட்டணத்தை செலுத்தி உள்ளே சென்றால்தன்னால் நடந்து சுத்திப்பார்க்க முடியாது என்பவர்களுக்கு பேட்டரி கார் உள்ளது. பேட்டரி காரில் செல்வதென்றால் 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கட்டணத்தை செலுத்தி காரில் விலங்கியல் பூங்காவை சுற்றிப்பார்க்கலாம். நடந்துசெல்பவர்கள் நடக்க ஆரம்பித்தால் பறவைகள்,
சிங்கம், புலி, மான், ஒட்டகச்சிவிங்கி, யானை, வரிக்குதிரை, மனிதக்குரங்கு, பாம்பு, கரடி என 2 மணி நேரம் நேரம் செல்வதே தெரியாமல் இங்குள்ளவற்றை பார்த்து ரசிக்கலாம்.
மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்:

அம்மன் என்றாலே பக்தர்களிடம் அன்பும் அதே சமயம் அரவணைப்பும் கொண்ட கடவுள். தன்னுடைய பக்தர்களுக்கு ஒருபிரச்னை என்றால் ஆக்ரோஷத்தை காட்டி காக்கும் கடவுள் அவர்களே.
நம்முடைய பேருந்து சுற்றுலாவில் அடுத்ததாக நாம்பார்க்கவிருக்கும் சுற்றுலாத்தலம் ஆன்மீக சுற்றுலாதலம். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரில் 13 கிலோமீட்டர் தொலைவில் சாமுண்டீஸ்வரி மலை உள்ளது.
இந்த மலையில் காக்கும் கடவுளாக வீற்றிருக்கிறார்சாமுண்டீஸ்வரி தேவி.
காக்கும் கடவுள் என்பதற்கு ஒரு புராணக்கதை அங்குள்ள மக்கள் கூறுவது மிகிஷாசூரன் என்றஅரக்கன் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் இதனால் மக்கள் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் தஞ்சம் அடைந்ததாகபுராணத்தில் கூறப்படுகிறது.
இதனால் அம்மன் அரக்கனை வதம்செய்தார். அதனாலே அம்மன் மகிஷாசுர மர்த்தினி என்றும்அழைக்கபடுகிறது. இதனை விமர்சையாக கொண்டாடும் விதமாக தசரா கொண்டாடப்படுகிறது.
கோவிலின் முன்புறம்மகிஷாசுரன் சிலை உள்ளதை நாம் பார்க்கலாம். 1000 படிக்கட்டுக்கள் கொண்ட இந்த கோவிலின் 800 வது படிக்கட்டில்சிவன் சிலையும் அதற்கு நேர்எதிர் ஒரு பெரிய நந்தி சிலையும் உள்ளது.
தற்போது இந்தக்கோவிலுக்கு பேருந்துகளில் செல்லசாலைவசதியும் போடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வந்துசெல்லும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்குசிறப்பு தரிசன டிக்கெட் வசதியும் உள்ளது.
நவராத்ரி பெருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலுக்கு சென்றுஅம்மனை வணங்கி அருள் பெற்று அங்கிருந்து கிளம்பிவிட்டோம். மைசூர் சுற்றுலா தலங்கள்
மைசூர் அரண்மனை:

மைசூர் நகரில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை 125 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அரண்மனைக்குஉள்ளே 6 கோவில்கள் உள்ளது.
மூன்று நுழைவு வாயில்களை கொண்ட இந்த அரண்மனைக்கு உள்ளே செல்ல நுழைவுகட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1897 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த அரண்மனை 1912 வரை காட்டியுள்ளனர்.
அதாவது15 ஆண்டுகள் நடைபெற்ற 110 ஆண்டு பழமையான இந்த மைசூர் அரண்மனை 41 லட்சத்து 47 ஆயிரத்து 913 ரூபாய் நிகரமதிப்பாக 42 லட்சம் செலவாகி உள்ளது. இதில் 175 அறைகள் உள்ளது.
உடையார்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தஅரண்மனையின் உள்பகுதி முழுவதும் கிரனைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் கோபுரங்கள் தங்கத்தால்செய்யப்பட்டுள்ளன.
அரண்மனையில் அமைந்துள்ள தூண்கள், கம்பங்கள் அனைத்தும் சிற்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் பலவிதபடைப்புகளை கொண்டுள்ளது. இந்த அரண்மனையின் இரண்டாவது மாடியில்
மன்னர் குடும்பத்தினர் திருமண வைபவம் நடத்தும் அரங்கு உள்ளது.
மக்களின் குறைகளை கேட்கும் தர்பார் மண்டபமும் உள்ளது. அத்துடன் அந்தப்புரம், நூலகம், மல்யுத்த மைதானம், ஆயுத அறை என எண்ணற்ற அறைகளை கொண்ட இந்த அரண்மனையின் கதவு, ஜன்னல், அலங்கார கண்ணாடி அலமாரிகள்பார்வையாளரை கவர்கின்றன.
அரண்மனை வளாகத்தில் உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிசுகளின் வரலாறுஅனைத்தும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
தசரா திருவிழா கொண்டாடும் அந்த 10 நாட்களும் விழாக்கோலம்தான். மைசூரின் அடையாளமான இந்த அரண்மனை இரவுநேரங்களில் லைட் வெளிச்சத்திற்கு தங்கத்தை போல் ஜொலிக்கும் எனலாம்.
அரண்மனையின் உள்ளே செருப்புடன் செல்லக் கூடாது. அரண்மனைக்கு வெளியே அம்பாரி பேருந்து உள்ளது இதில் 250 செலுத்தி 1 மணி நேரத்திற்குசுற்றிக்காண்பிப்பார்கள்.
அதேபோல் அரண்மனைக்கு வெளியே குதிரை வண்டிகள் இருக்கும் அதில் நாம் சுற்றிப்பார்க்கலாம்.
செயின்ட் பிலோமினா தேவாலயம்:
எம்மதமும் சம்மதமே என்பதுபோல நமது சுற்றுலா பேருந்து அடுத்ததாக நின்றயிடம் புனித பிலோமினா தேவாலயம். புனிதஜோசப் மற்றும் புனித பிலோமினா தேவாலயம் என்பது இதன் முழுப் பெயராகும்.
1936 -ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஆசியாவின் மிக உயரமான தேவாலயங்களில் ஒன்று.
அடுத்ததாக நமது சுற்றுலா பேருந்து ஸ்ரீரங்கப்பட்டினத்தை நோக்கி பயணித்தது. இங்கு திப்பு சுல்தான் கோட்டை, திப்புசுல்தான் சமாதி,ஸ்ரீ ரங்கநாதர் கோவில், பிருந்தாவன் பூங்கா, பறவைகள் சரணாலயம், கிருஷ்ண ராஜ சாகர் அணை எனஅனைத்தையும் சுற்றி காண்பித்து இரவு 9 மணிஅளவில் பயணத்தை முடித்துவிடுகின்றன.
மைசூர் பேருந்து சுற்றுப்பயணம் நமக்கு ஒரு நிறைவான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பேருந்தில் சுற்றிப்பார்த்த இடங்களை தவிர இன்னும் பல லலிதாமஹால், fish acquarium என பல சுற்றுலாத்தலங்கள்மைசூரில் உள்ளது. மைசூர் சுற்றுலா தலங்கள்
ஒரு நாளில் குறைந்த செலவில் கலாச்சாரத்தின் தொன்மையான அருகாட்சியகம்,புவிசார் அடையாளம் மைசூர் பட்டு, மன்னர்களின் வாழ்க்கைமுறையை நேரடியாக பார்க்கும் மைசூர் அரண்மனை, தசரா விமர்சையாக கொண்டாடும்சாமுண்டிஸ்வரியம்மன் கோவில்,சென்ட் பிலோமினா தேவாலயம் என பால சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்களாம்.





